Saturday, 21 July 2012

இயற்கை


 

பணம், வசதி, வாய்ப்பு என்று பல காரணங்களுக்காக நகரத்தில் வாழ்ந்தாலும், உள் மனம் கிராமத்து வாழ்க்கையை எண்ணி ஏங்காமல் இருப்பதில்லை...
மாசுகளற்ற இயற்கை காற்று, வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள், 30அடியில் நிலத்தடி நீர், வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி, எங்கு பார்க்கிலும பச்சை பசுமை........

பாரதியும் உணர்ந்துதானே சொல்லியிருப்பார்
"
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்."

No comments:

Post a Comment