30 வருடங்களுக்கு
முன்னால் கண்ணதாசனை
பார்த்து நீ
கவிஞனா? என
கருணாநிதி கேட்டதற்கு
கண்ணதாசன் எழுதிய
கவிதையை பாருங்கள்...
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல
இவர்களுக்கும்
இந்த பூமியில்
வாழ உரிமை
உண்டு.
செங்கல்பட்டு போராட்டத்திற்கு சென்றிருந்த போது, பழைய பேருந்து நிலையம் அருகே இவரை பார்த்தேன் . உடம்பெல்லாம் அழுக்கு . குளிப்பதே இல்லை. உடுக்கவோ ஒரு கீழாடை . அதுவும் அழுக்கு . தலைமுடி சிக்கு பிடித்து சடை போட்டு உள்ளது. உறைவிடம் குப்பை தெருக்களில். உறவுகள் யாருமில்லை. இவர் உணவுக்கு என்ன செய்கிறார். யாரிடமும் பிச்சை கேட்பதில்லை. இந்த கடையின் முன் உள்ள குப்பைகளை எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போடுகிறார் . அதற்கு கூலியாக கடைகாரர் இரண்டு வடைகளை கொடுக்கிறார். என்றாவது கருணை உள்ளங்கள் இவரை பார்த்தால் தேனீர் , உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.
யார் இவர்கள் , எதற்கு இப்படி சுற்றுகிறார்கள் . இவர்களை போல் இந்த நாட்டில் ஏராளம் பேர்கள் அலைகிறார்கள் . இவர்களை யார் கவனிப்பது? இவர்களில் சிலர் பைத்தியங்கள், சிலர் குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்கள், சிலர் உலகை வெறுத்து வெளிய வந்தவர்கள். எந்த உடைமையும் உறவுகளும் இல்லாதவர்கள் , எந்த ஆதரவும் இல்லாதவர்கள். இவர்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு . ஆனால் அரசு செய்வதில்லை. அதனால் நம்மை போன்ற மக்களுக்கே அந்த பொறுப்பு உண்டு .
மனித நேய அக்கறை உள்ளவர்கள் தயவு செய்து இது போன்ற மனிதர்கள் உங்கள் கண்களில் தென்பட்டால், அவர்களுக்கு குறைந்த பட்சம் உணவு வாங்கிக் கொடுங்கள். காரணம் இவர்கள் பணத்தை எதிர்பார்பதில்லை. ஒரு படி மேலாக செய்ய முடியும் என்றால் இவர்களுக்கு நல்ல உடை கொடுங்கள். அதற்கு மேலும் செய்ய முயற்சி செய்பவர்கள் இவர்களை குளிக்க வைத்து , பின்பு இவரை போன்றவர்களை பராமரிக்கும் இல்லங்களில் இவர்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் இவர்கள் தென்பட்டால், கண்டும் காணாமல் போய் விடாதீர்கள். ஒரு தேநீராவது வாங்கிக் கொடுங்கள். நம்முடைய அன்பு வேண்டுகோள். உயிர்களுக்கு உதவி செய்வதே இறை வழிபாடு என்று உணர்ந்து இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நமக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்று உணருவோம்..
செங்கல்பட்டு போராட்டத்திற்கு சென்றிருந்த போது, பழைய பேருந்து நிலையம் அருகே இவரை பார்த்தேன் . உடம்பெல்லாம் அழுக்கு . குளிப்பதே இல்லை. உடுக்கவோ ஒரு கீழாடை . அதுவும் அழுக்கு . தலைமுடி சிக்கு பிடித்து சடை போட்டு உள்ளது. உறைவிடம் குப்பை தெருக்களில். உறவுகள் யாருமில்லை. இவர் உணவுக்கு என்ன செய்கிறார். யாரிடமும் பிச்சை கேட்பதில்லை. இந்த கடையின் முன் உள்ள குப்பைகளை எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போடுகிறார் . அதற்கு கூலியாக கடைகாரர் இரண்டு வடைகளை கொடுக்கிறார். என்றாவது கருணை உள்ளங்கள் இவரை பார்த்தால் தேனீர் , உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.
யார் இவர்கள் , எதற்கு இப்படி சுற்றுகிறார்கள் . இவர்களை போல் இந்த நாட்டில் ஏராளம் பேர்கள் அலைகிறார்கள் . இவர்களை யார் கவனிப்பது? இவர்களில் சிலர் பைத்தியங்கள், சிலர் குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்கள், சிலர் உலகை வெறுத்து வெளிய வந்தவர்கள். எந்த உடைமையும் உறவுகளும் இல்லாதவர்கள் , எந்த ஆதரவும் இல்லாதவர்கள். இவர்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு . ஆனால் அரசு செய்வதில்லை. அதனால் நம்மை போன்ற மக்களுக்கே அந்த பொறுப்பு உண்டு .
மனித நேய அக்கறை உள்ளவர்கள் தயவு செய்து இது போன்ற மனிதர்கள் உங்கள் கண்களில் தென்பட்டால், அவர்களுக்கு குறைந்த பட்சம் உணவு வாங்கிக் கொடுங்கள். காரணம் இவர்கள் பணத்தை எதிர்பார்பதில்லை. ஒரு படி மேலாக செய்ய முடியும் என்றால் இவர்களுக்கு நல்ல உடை கொடுங்கள். அதற்கு மேலும் செய்ய முயற்சி செய்பவர்கள் இவர்களை குளிக்க வைத்து , பின்பு இவரை போன்றவர்களை பராமரிக்கும் இல்லங்களில் இவர்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் இவர்கள் தென்பட்டால், கண்டும் காணாமல் போய் விடாதீர்கள். ஒரு தேநீராவது வாங்கிக் கொடுங்கள். நம்முடைய அன்பு வேண்டுகோள். உயிர்களுக்கு உதவி செய்வதே இறை வழிபாடு என்று உணர்ந்து இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நமக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்று உணருவோம்..
No comments:
Post a Comment