Thursday, 20 September 2012

அம்மா

பணக்கார நண்பர்கள் புடைசூழ..
பகட்டான உணவகத்தில்
முள்கரண்டி உதவிகொண்டு
உண்ட உணவில் எல்லாம் இருந்தது...!

சுள்ளிகொண்டு
அடுப்புமூட்டி..
அனலில் வெந்து
அம்மா சமைத்துப்போட்ட
உணவில் இருந்த
அம்மாவின்
கைப்பக்குவத்தைத் தவிர..


எல்லா
அம்மாக்களுக்கும்
இந்தக் கவிதை
சமர்ப்பணம்..

No comments:

Post a Comment